மார்க்சிஸ்ட் கட்சி பார்ப்பணியத்தின் பிடியில் சிக்கியுள்ளது- வி.டி.ராஜசேகர்

கேரள மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கட்சி பார்ப்பணியத்தின் பிடியில் சிக்கியுள்ளதாக தலித் வாய்ஸ் பத்திரிகையின் ஆசிரியர் வி.டி.ராஜசேகர் தெரிவித்துள்ளார்.

முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் ஒரு ஈழவர் (தாழ்த்தப்பட்ட சமூகம்). அதனால் அவரால் ஒன்றும் செய்யவியலாது.கட்சியின் கேரள மாநிலச் செயலாளரும் ஒரு ஈழவர்தான் என்றாலும் அவர் ஒரு தனிரகம். பார்ப்பணீயம்தான் சி.பி.எம்மை கட்டுப்படுத்துகிறது.

அதேவேளையில் ஆர்.எஸ்.எஸ்ஸைவிட ஆபத்தானவர்கள் மார்க்சிஸ்ட்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

தி ஆல் இந்தியா பேக்வார்ட் (எஸ்.சி, எஸ்.டி, ஒ.பி.சி) அண்ட் மைனாரிட்டீ கம்யூனிட்டி எம்ப்ளாயீஸ் ஃபெடரேசனின் ஆறாவது மாநாட்டில் முக்கிய விருந்தினராக கலந்துக் கொண்டு உரை நிகழ்த்தினார் அவர்.

மேலும் அவர் கூறியதாவது:"ஜாதி வழக்கமுறை வலுவாக நிலைப்பெற்றிருக்கும் மாநிலம் தான் கேரளா. கேரளாவில் மார்க்சிஸ்டுகளா? ஆட்சி செய்கின்றார்கள் என்ற சந்தேகம் நமக்கு ஏற்படலாம். ஆனால், அவர்கள்தான் ஆர்.எஸ்.எஸ்ஸைவிட ஜாதி வழக்க முறையை நிலைநாட்டுகின்றனர்.

காங்கிரசில் பெரும்பாலோரும் ஹிந்துத்துவாவாதிகள்தான். நேற்று முன்தினம் காவி பயங்கரவாதத்தைக் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உரை நிகழ்த்தியிருந்தார். ஆனால், தற்பொழுது காங்கிரஸ் தலைமை, காவி பயங்கரவாதம் என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்காக அவரிடம் கேள்வி எழுப்பியுள்ளது. ஏன் காங்கிரஸ் கட்சி இந்தியாவில் மிகக்குறைந்த சதவீதமே மக்கள் தொகையைக் கொண்ட பிராமணர்களின் விவகாரத்தில் கவலைக் கொள்கிறது?.

85 சதவீதம் மக்கள் தொகையைக் கொண்ட முஸ்லிம், கிறிஸ்தவ, தலித் பிரிவினரை ஏன் கண்டுகாணாமல் நடிக்கின்றனர்? மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் என்ன நடக்கிறது? என்பது எவருக்கும் தெரியாது.

ஏ.கே.அந்தோணி பாதுகாப்பு அமைச்சரானது சிரியன் கிறிஸ்தவர் என்ற ஒரேக்காரணத்தினால் தான். சிரியன் கிறிஸ்தவர்கள் பார்ப்பணீயர்களை விட ஆபத்தானவர்கள். கேரள மாநிலத்தில் ஆறு சதவீதம் மக்கள் தொகையைக் கொண்ட இவர்கள்தான் பெரும்பாலான கிறிஸ்தவ தேவாலயங்களையும், நிறுவனங்களையும் நடத்தி வருகின்றனர். கேரளத்தில் மீன் பிடித் தொழிலாளிகளான முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு மத்தியிலிலுள்ள நல்ல உறவை கெடுப்பதற்காகத்தான் ஆர்.எஸ்.எஸ் மாதா அமிர்தானந்தாயி என்ற மீனவப்பெண்ணை பயன்படுத்துகிறது.

ஜாதீய வழக்கமுறை என்பது ஒரு விஷமாகும். ஜாதீய வழக்க முறையைக் குறித்து பேசுவதைவிட சிறந்தது ஹிந்துயிஷத்தைக் குறித்து பேசுவதாகும்.

ஆர்.எஸ்.எஸ்ஸின் புதிய உருவாக்கமான அபினவ் பாரத்தான் காவி பயங்கரவாதத்தின் அடிப்படை. அவர்கள் இந்த தேசத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்களை கொன்றுள்ளனர். ஆனால் ஆட்சியாளர்களுக்கும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அச்சமாக உள்ளது.

அபினவ் பாரத்தும், யூதர்களும் உறவினர்களாவர். அபினவ் பாரத்தின் வளர்ச்சியின் பின்னணியில் யூத லாபியாகும். அபினவ் பாரத்தின் தலைவர் ஸ்ரீகாந்த் புரோகித் இஸ்ரேலுக்கு சென்றுள்ளது உறுதிச் செய்யப்பட்டுள்ளது. உலகத்தின் பல்வேறு நாடுகளிலும் யூதர்களின் இத்தகைய அசுத்தமான உறவைக் காணலாம். அமெரிக்காவையும், பிரிட்டனையும் கட்டுப்படுத்துவது யூதர்கள்தான்.

வெறும் 15 சதவீதம் மக்கள் தொகையைக் கொண்ட மேல்ஜாதியினர் எவ்வாறு அரசை கட்டுப்படுத்துகின்றனர்? அவர்கள் தலித் உள்ளிட்ட மக்களை பிரிக்கின்றனர். எல்லாவித பொருளாதார ஆதாரங்களும், வங்கிகளும் கைவசப்படுத்தியுள்ளனர்.

முஸ்லிம்கள் உள்ளிட்ட 85 சதவீத மக்களின் பகுஜன் சமாஜ் உருவாக வேண்டியுள்ளது. அவ்வாறு உருவானால்தான், பிற்படுத்தப்பட்டோருக்கு இங்கு அதிகாரவர்க்கமாக இயலும்." இவ்வாறு வி.டி.ராஜசேகர் உரை நிகழ்த்தினார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
பாலைவனதூது - Koothanallur Muslims

Related

RSS 7126790734152619492

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item