ஓட்டுக்காக கோவா கிருஸ்துவ தலைர்களுக்கு பாஜக வலைவீச்சு


இதற்கான முதல் கட்டப் பேச்சுகளை மேற்கொள்ளும் பொறுப்பு கட்சியின் தேசியச் செயலரும் டெல்லி மாநகரின் முன்னாள் மேயருமான ஆர்த்தி மெஹ்ராவிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
கோவாவைப் பொறுத்தவரையில் பாஜக அணிக்கு இன்னமும் 4% முதல் 7% வரையிலான வாக்குகள் கூடுதலாகக் கிடைத்தால் ஆட்சியைப் பிடித்துவிட முடியும்.கிறிஸ்தவர்களிடம் காங்கிரஸ் கட்சி செய்யும் பிரசாரம் காரணமாகவே பாஜகவை நெருங்க கிறிஸ்தவர்கள் அஞ்சுகிறார்கள் என்பதால் அவர்களிடமே நேரடியாகப் பேசுவது என்ற முடிவை கட்சித் தலைமை எடுத்திருப்பதாக ஆரத்தி தெரிவித்தார்.
கோவாவில் ஊழல் அதிகரித்துவிட்டது.இந்த அரசியல் ஊழல் காரணமாக மாநிலத்தின் வளர்ச்சி வெகுவாக பாதித்து வருகிறது. தங்களுடைய அரசை அகற்றும் வலிமை பாஜகவுக்கு இல்லை என்பதாலேயே காங்கிரஸார் இறுமாப்போடு செயல்படுகின்றனர்.இந்த ஊழல் விவகாரங்கள் மாநில மக்களை அதிலும் குறிப்பாக கிறிஸ்தவர்களை மிகவும் மனம் நோகச் செய்துள்ளது.எனவே பாரதிய ஜனதா என்பது அரசியல் கட்சிதானே தவிர அது மதவெறிக் கட்சி அல்ல,நாட்டின் வளர்ச்சியும் பாதுகாப்பும்தான் அதன் குறிக்கோளே தவிர எந்த சிறுபான்மை இனத்துக்கும் அது எதிரியல்ல என்று கிறிஸ்தவர்களுக்கு நம்பிக்கை ஊட்டவே இந்த முயற்சியைத் தாங்கள் மேற்கொண்டிருப்பதாக ஆர்த்தி மெஹ்ரா தெரிவித்தார்.
Koothanallur Muslims
Koothanallur Times