கஷ்மீர் மற்றும் குஜராத் பிரச்சனைகள் மூலம் இந்தியா ஜனநாயக மதசார்பற்ற நாடு என்றுக் கூற தகுதியில்லை - அருந்ததிராய்

டெல்லியில் நேற்று ‘கஷ்மீருக்கு சுதந்திரம்தான் ஒரே வழி’ என்ற தலைப்பில் நடைப்பெற்ற கருத்தரங்கில் 'யாருக்கேனும் ’ஷு’வை எறிய வேண்டுமானால் இப்பொழுது எறிந்துக் கொள்ளுங்கள் எனக் கூறியவாறு தனது உரையை துவக்கினார் பிரபல பத்திரிகையாளரும், மனித உரிமை போராளியுமான அருந்ததிராய்.

மேலும் அவர் கூறியதாவது: கஷ்மீர் இந்தியாவின் பிரிக்கமுடியாத பகுதி அல்ல. கஷ்மீர் ஒரு சர்ச்சைக்குரிய பகுதி என்பதை ஐ.நாவில் இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. 68 ஆயிரம் கஷ்மீரி முஸ்லிம்களை கொன்ற ஒரு நாட்டிற்கு ஜனநாயக நாடு என்றுக் கூற உரிமையில்லை.

குஜராத்தில் 2500 முஸ்லிம்களை இனப்படுகொலைச் செய்த ஒரு நாட்டிற்கும் மதசார்பற்ற நாடு என்றுக்கூற தகுதியில்லை. வலுவான ராணுவத்தினருக்கு எதிராக கல்வீச்சில் ஈடுபடும் கஷ்மீரி இளைஞர்களையும், பெண்களையும், குழந்தைகளையும் பார்த்து சல்யூட் செய்யாமலிருக்க முடியவில்லை என அருந்ததிராய் உரை நிகழ்த்தினார்.

இக்கருத்தரங்கில் புரட்சிக் கவிஞர் வரவரரவ், மனித உரிமை ஆர்வலர்கள் ஷேக் ஷவ்கத் ஹுசைன், அமீத் பட்டாச்சார்யா, என்.வேணு, மாலெம், நஜீப் முபாரகி, சுஜாதோ பத்ரா, பேராசிரியர்கள் எஸ்.எ.ஆர் கிலானி மற்றும் ஜி.என்.ஸாயிபாபா ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

Related

MUSLIMS 8057821216823679162

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item