SDPI-ன் துறைமுக தொகுதி வேட்பாளர்

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உறுப்பினர்கள்
SDPI (சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா ) சார்பாக‌ துறைமுகம் தொகுதியின் வேட்பாளர் அறிமுக விழா மற்றும் அத்தொகுதி செயல்வீரர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று சென்னையில்  நடைப்பெற்றது.

வருகின்ற தமிழக் சட்டமன்றத் தேர்தலை எந்த கட்சியுடன் கூட்டணி இல்லாமல் தனித்தன்மையுடன் SDPI 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

அதில் ஒரு தொகுதியான சென்னை துறைமுகம் தொகுதியின் வேட்பாளரை அறிமுகம் செய்து வைக்கும் வகையிலும், அத்தொகுதியின் செயல்வீரர்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சியையும் நேற்று மாலை 7.00 மணி அளவில் சென்னை ராயபுரத்தில்

மாநிலத் தலைவர் அவர்களுடன் துறைமுகம்  வேட்பாளர் அமீர் ஹம்ஜா
உள்ள ஃபாரூக் மஹாலில் வைத்து நடைப்பெற்றது. இந் நிகழச்சிக்கும் மா நில தலைவர் கே.எஸ்.எஸ் தெஹாலான் பாகவி அவர்கள் தலைமை தாங்கினார். வட சென்னை மாவட்ட பொதுச்செயலாளர் முஹம்மது ரஷீத் அவர்கள் தொகுத்து வழங்கினார். தென் சென்னை மாவட்ட பொதுச்செயலால புகாரி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். திருவள்ளூர் மாவட்ட தலைவர் ஜாஹிர் ஹுஸைன், தென் சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது ஹுஸைன், காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் பிலால் அவர்கள் பேசினார்கள். இந் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாப்புலர் ஃப்ரண்டின் மா நில செயலாள ஷேக் முஹம்மது அன்சாரி மற்றும், பாப்புலர் ஃப்ரண்டின் சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது நாஜிம் ஆகியோர் வாழ்த்துறை வழங்கினார்கள். அதில் பாப்புலர் ஃப்ரண்ட், SDPI போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் வெற்றிக்காக அயராது உழைக்கும் என்று வாக்குறுதி அளித்தனர்.

நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக மா நில செயற்குழுவால் முடிவு செய்யப்பட்டு, வட சென்னை மாவட்ட தலைவர் அமீர் ஹம்ஜா அவர்கள் துறைமுகம் தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டு அவரை அனைவர் முன்பும் அறிமுகம் செய்து வைத்தார் மா நில தலைவர். இறுதியாக மா நில
 
தலைவர் உரையாற்றும்போது, எஸ்.டி.பி.ஐ-ன் வளர்ச்சி இன்று ஆளும் அதிகார வர்க்கட்திற்கு பெறும் தலைவலியாக இருக்கிறது என்றும், தொடங்கப்பட்டு 1 1/2 வருடங்களே ஆனாலும் இந்தியாவில் தவிர்க்கமுடியாத சக்தியாக எஸ்.டி.பி.ஐ மாறி வருவதை சுட்டிக்காட்டினார்.

வருகின்ற சட்டமன்ற தேர்தலை தைரியத்துடனும் உத்வேகத்துடன் சந்திக்க வேண்டும், வெற்றியோ தோழ்வியோ எதுவாயினும் மனம் தளர்ந்து விடாமல் சமூகத்திற்காக பணியாற்றவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

பத்திரிக்கைக்கு பேட்டி அளிக்கும் மாநில தலைவர் தெஹ்லான் பாகவி

இறுதியாக ஆர்.கே நகர் தொகுதி செயலாளர் ரத்தினம் அவர்கள் நன்றியுரை ஆற்ற நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

SDPI - CHENNAI

Related

பெட்ரோல் விலை உயர்வு மற்றும் எண்டோசல்பான் தடை செய்ய கோரி SDPI ஆர்ப்பாட்டம்

பெட்ரோல் விலை உயர்வு மற்றும் எண்டோசல்பான் தடை செய்ய கோரி சென்னையில் நேற்று ( 20 -05 -2011 ) 4 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு SDPI மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. பெட்ரோலிய பொர...

மாட்டை முன்வைத்து மீண்டும் மதக் கலவரம்?

RSS – காவல் துறை கூட்டுச் சதி மதுரை RSS அலுவலகத்தில் மாட்டுத் தலை வீசிய மர்ம நபர்கள்'' என்ற செய்தியை மார்ச் 2 அன்று வாசிக்கையில், மதுரையில் பொதுவாக நிலவும் ஓர் அமைதியான சூழலைத் தகர்க்க யாரேனும் முடி...

ஜெயலலிதாவுக்கு SDPI மாநில தலைவர் வாழ்த்து

அஇஅதிமுக கூட்டணி அமோக வெற்றி டாக்டர் ஜெயலலிதா அவர்களுக்கு SDPI மாநில தலைவர் தெஹ்லான் பாகவி வாழ்த்து தெரிவித்துள்ளார். SDPI யின் மாநில தலைவர் தெஹ்லான் பாகவி இன்று விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியி...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Hot NewsRecentArchive

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item