இந்தியாவின் முஸ்லிம் விரோத போக்கு: மீண்டும் ஒரு பிரிவினைக்கு வழிவகுக்கும்.

கேரளம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் பாகிஸ்தானின் லஷ்கர்-எ-தொய்பா போராளிகள் அமைப்பு கடல் வழியே தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. இது குறித்து மத்திய உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை
நிருபர்களிடம் கூறுகையில், பாகிஸ்தானின் லஷ்கர்-எ-தொய்பா போராளிகள் அமைப்பு கடல் வழியாக இந்தியாவில் கடலோர மாநிலங்களின் முக்கிய நகரங்களை தாக்க திட்டமிட்டுள்ளது.

இதற்காக தனது கடலோரப் பகுதிகளில் அந்த போராளிகள் அமைப்பை சார்ந்தவர்களுக்கு பாகிஸ்தான் பயிற்சி அளித்து வருவதை நமது உளவுத் துறையினர் கண்டறிந்துள்ளனர்.
கேரளா, தமிழ்நாடு, கர்நாடகம், மகாராஷ்டிரம், குஜராத் மற்றும் ஒரிஸ்ஸா மாநிலங்களில் அவர்கள் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது. எனவே இந்த மாநிலங்களை மத்திய அரசு உஷார்படுத்தியுள்ளது.போராளிகள் தாக்குதல் நடத்தினால் அதை எதிர்கொள்ளும் வகையில் போலீஸ் படைகளை தயார் நிலையில் வைத்திருக்குமாறு அறிவுறுத்தியிருக்கிறோம்.

கேரளாவில் பேராசிரியரின் கையை இந்திய மக்கள் முன்னணி தொண்டர்கள்(பாபுலர் பிரான்ட் ஒப் இந்தியா) வெட்டியது தொடர்பாக தேசிய அளவில் விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என்று கேரள அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுபற்றி பரிசீலித்து வருகிறோம். கேரளாவுக்கு எதிர்காலத்தில் மத தீவிரவாதம் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்று கருதுகிறோம் என்றார் பிள்ளை. வயநாடு வனப் பகுதிகளில் நக்ஸல்களின் ஆதிக்கம் பரவி வருவது குறித்தும், அதை தடுப்பது குறித்தும் கேரள காவல்துறை அதிகாரிகளுடன் இன்று முக்கிய ஆலோசனைகளி்ல் பிள்ளை ஈடுபட்டுள்ளார்.

சிந்திக்கவும் : இனி இந்தியாவில் யாருக்கும் காய்ச்சல் வந்தாலும் அதற்கும் ஐ.எஸ்.ஐ. தான் காரணம் என்று சொல்ல கூடிய அளவுக்கு இந்த அரசும், உளவுத்துறையும் ஒரு கேடுகெட்ட நிலைக்கு போகிவிட்டது. இவர்கள் முழுக்க முழுக்க ஹிந்துத்துவ ஆதரவு அரசாக செயல்பட்டு வருகிறார்கள். இவர்கள் காஷ்மீர் முதல் பாபர் மசூதி வரை உள்ள எல்லா விசயங்களிலும் சரி ஹிந்துத்துவா பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவான ஒரு நிலையோடு செயல்பட்டு வருவதை பார்க்க முடியும். செப்டம்பர் 17 ல் பாபர் மசூதி தீர்ப்பு வர இருக்கிறது. இந்த தீர்ப்பை ஏற்றுகொள்ள மாட்டோம் என்று ஹிந்துத்துவா தீவிரவாத இயக்கங்கள் அறிவித்துள்ளன. இந்நிலையில் அவர்கள் இந்த தீர்ப்பை வரவிடாமல் தடுக்க இந்தியா முழுவதும் கலவரங்களை நடத்த திட்டமிட்டுள்ளனர். அவர்கள் அப்படி கலவரங்கள் நடத்தினால் அதை காரணம் காட்டி முஸ்லிம் இயக்கங்களை தடை செய்ய இந்த பாசிச ஆதரவு அரசு திட்டமிட்டுள்ளது தெளிவாக தெரிகிறது. இதற்க்கான முன்னோட்டம்தான் இந்த செய்திகள்.

இதுபோல்தான் இவர்கள் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போதும் செய்தார்கள். மசூதியை இடித்த பயங்கரவாத ஹிந்துத்துவா இயக்கங்களை விட்டு விட்டு ஜமாத்தே இஸ்லாமி, சிமி, போன்ற முஸ்லிம் இயக்கங்களை தடைசெய்தார்கள். மும்பை கலவர கொடூரன் பால் தாக்ரே மற்றும் குஜராத் கலவர ரத்த வெறிபிடித்த காடேறி பிணம் தின்னும் நரந்திர மோடி, அத்வானி, முரளிமனோகர் ஜோசி, அசோக் சிங்கால், இப்படி எல்லா தீவிரவாதிகளும், ஹிந்து தீவிரவாத இயக்கங்களும் வெளியே இருக்க முஸ்லிம் இயக்கங்களை மட்டும் தடை பண்ணினார்கள்,முஸ்லிம் தலைவர்களை பிடித்து சிறையில் போட்டார்கள் இந்த அயோக்கிய காங்கிரஸ் அரசு.

முஸ்லிம்கள் காங்கிரஸ், மற்றும் கம்னிஸ்ட் கட்சிகளின் மீது வைத்திருந்த நம்பிக்கையை முற்றிலுமாக தகர்க்க கூடிய வகையில் அந்த கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. அந்த கட்சிகளில் ஹிந்துவா அமைப்பினர் வூடுருவி விட்டார்கள் என்பதை கடந்த கலங்களின் செயல்பாடுகளும், இப்பொது அவர்கள் செயல்பட்டு வரும் விதமும் தெளிவாக படம்பிடித்து காட்டுகிறது.முஸ்லிம்கள் இந்தியாவை மதச்சார்பற்ற நாடு என்று நம்பும் அந்த நம்பிக்கையை தகர்க்கும் ஒவ்வொரு காரியமும் இந்தியாவை மீண்டும் ஒரு பிரிவினையை நோக்கி தள்ளும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

செய்தி: சிந்திக்கவும்.
கூத்தாநல்லூர் முஸ்லீம்கள்

Related

RSS 4639391114691546762

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item