பேராசிரியர் அனஸ் பதவிப் பிரமாணம் செய்ய நீதிமன்றம் அனுமதி

முவாற்றுப்புழாவில் நபி(ஸல்...) அவர்களை அவமதித்த பேராசிரியர் ஜோசப்பின் கை வெட்டப்பட்ட வழக்கில் கைதுச் செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட இலாஹியா கல்லூரி பேராசிரியர் அனஸ், கேரளாவில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள ப்ளாக் பஞ்சாயத்து டிவிசனில் போட்டியிட்டு அமோக வெற்றிப் பெற்றார்.

வியூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனஸ் பதவி ஏற்பு சத்தியப் பிரமாணம் செய்வதற்கு எர்ணாகுளம் செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி பி.கமால் பாஷா அனுமதியளித்துள்ளார்.

நாளை பதவி பிரமாணம் நடைபெறுகிறது.அவ்வேளையில் போலீஸ் காவலுடன் அனஸை அழைத்துச் சென்றுவிட்டு,மீண்டும் போலீஸ் காவலுடன் சிறைக்கு அழைத்துவர வேண்டுமென நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.

வருகிற செவ்வாய்க்கிழமை பேராசிரியர் அனஸின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் பரிசீலிக்கிறது.

செய்தி:தேஜஸ் - பாலைவனதூது

Related

SDPI 1563122976038690987

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item