பாபர் மஸ்ஜித் கட்டவிட மாட்டோம்; தொகாடியா கொக்கரிப்பு!

முஸ்லிம்களுக்கு சொந்தமான பாபர் மஸ்ஜிதில் , இரவோடு இரவாக சிலை வைத்து, பின்பு ஒரு கட்டத்தில் மஸ்ஜிதை உலகறிய இடித்து தரைமட்டமாகிவிட்டு, 'நாங்கள்தான் பள்ளியை இடித்தோம்; அதற்காக பெருமைப்படுகிறோம் என்று கொக்கரித்த தீவிரவாத இந்துத்துவாக்களின் கொட்டத்தை ஒடுக்கி, அவர்களை சிறைக்கூடத்தில் தள்ள துணிவற்ற ஆட்சி தொடர்ந்து நீடிப்பதாலும், மஸ்ஜித் நிலத்தை மரத்தடி தீர்ப்பின் மூலம் தீவிரவாத இந்துத்துவாக்களுக்கு தாரை வார்க்கும் நீதிமன்ற நீதிபதிகள்[!] நாட்டில் இருப்பதாலும், தீவிரவாத இந்துத்துவாக்களின் கொக்கரிப்பு நாளுக்குநாள் அதிகரிக்கிறது.

அயோத்தியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ள தீவிரவாத விசுவ இந்து பரிஷத் தலைவர் தீவிரவாதி தொகாடியா, அயோத்தியில் ராமர் பிறந்த இடம் இதுதான் என்பதை உறுதியாக நம்புகிறோம். இந்த இடத்தில் புதிய மசூதி கட்டுவதற்கு நாங்கள் ஒரு போதும் அனுதிக்க மாட்டோம். இங்குள்ள 67 ஏக்கர் நிலத்தையும் சேர்த்து மிகப் பெரிய ராமர் கோவிலை கட்டுவோம். இந்துக்களும் முஸ்லிம்களும் கலாச்சார ரீதியாக ஒன்றாக வாழ முடியாது என்று முகமது அலி ஜின்னாவே கூறி இருக்கிறார். அப்படி இருக்க மசூதியும், ராமர் கோவிலும் அருகருகே எப்படி இருக்க முடியும். அயோத்தியில் மசூதியும் கட்ட வேண்டும் என்று முஸ்லிம்கள் கோரிக்கை விடுப்பதை நிறுத்தி விட்டு ராமர் கோவில் கட்டுவதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று பேசியுள்ளார் அல்ல. உளறியுள்ளார். இதன் மூலம் தங்களுக்கு சாதகமான அலகாபாத் தீர்ப்பைக் கூட தீவிரவாத இந்துத்துவாக்கள் ஏற்கத் தாயரில்லை என்பதும், அவர்களின் நோக்கம் பாபர் மஸ்ஜித் இடத்தை முற்றிலுமாக அபகரிப்பது என்பதும் தெளிவாகிறது. 
 
சிந்திக்கவும் - கூத்தாநல்லூர் முஸ்லீம்கள் 

Related

RSS 4656375791369182432

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item