ஊழலுக்கெதிரான இயக்கத்தை பாசிச சக்திகளிடமிருந்து விடுவிக்க வேண்டும்: PFI

சந்தேகத்திற்குரிய வகையில் சொத்துக்களை பலமடங்கு சேகரித்து குவித்து வைத்துள்ள பாபா ராம்தேவ் ஊழலுக்கு எதிரான பேராளியாக தன்னைக்காட்டிக் கொள்வது பரிதாபத்திற்குரியது. காந்தியவாதி அன்னா ஹசாரேயின் தலைமையில் நடைபெற்ற வெற்றிகரமான போராட்ட்த்தை தொடர்ந்து யோகா வியாபாரியின் திடீர் வருகை ஆர்எஸ்எஸ் பாஜகவின் அரசியல் திட்டத்தின் ஒரு பகுதிதான்.
எனவே ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் நலன்கருதி அனைத்து உனர்வுள்ள மனித உரிமை ஆர்வலர்களும் சமூக ஆர்வலர்களும், பாபா ராம்தேவ் தலைமையிலான மற்றும் அவர்களின் கூட்டாளிகளின் கேலிக்கூத்தான சத்தியாக்கிரகங்களை ஆதரவளிப்பதை விட்டும் விலகியிருக்க வேண்டும்.
ஆரம்பகட்ட்த்தில் ராம்தேவிடம் மத்திய அரசாங்கம் கருணைகாட்டியதும் பின்னர் வலுக்கட்டாயமாக நடுநிசியில் ராம்லீலா மைதானத்தை விட்டு வெளியேற்றியதும் தேவையற்றது.
மிக மிக உயர் மட்டத்தில் ஊழலை பிரித்துப்பார்க்க முடியாது தீர்க்கவும் முடியாது. அதற்கு பதிலாக மைய நீரோட்ட அரசியலை தூய்மைப்படுத்த காங்கிரஸ் பாஜக மற்றும் சிபிஐஎம் போன்ற கட்சிகளுக்கு ஆதரவளிக்காமல் மத்தியில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்பதையே இப்பிரச்சினைக்கு இறுதித்தீர்வாக மீண்டும் இக்கூட்டம் நினைவுகூர்கிறது.