ஹாஜிகளுக்கு IFF தன்னார்வத் தொண்டர்களின் அபார சேவை


மக்கா : IFF என்னும் இந்தியா ஃபிராட்டர்னிட்டி ஃபோரம் வருடா வருடம் புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற வரும் ஹாஜிகளுக்கு தன்னலமற்ற தொண்டுகள் பல ஆற்றி வருகின்றது. இந்த வருடமும் அவர்களின் சேவை அபாரமாக இருந்தது. IFF தன்னார்வத் தொண்டர்கள் அரஃபாவிலும், முஸ்தலிபாவிலும், கூடார நகரமான மினாவிலும் பெரு வெள்ளமாகத் திரண்டு சென்ற ஹாஜிகளுக்கு இடைவிடாது சேவைகள் செய்தனர். இது ஹாஜிகளுக்கு மிகுந்த உதவியாகவும், நிவாரணமாகவும் இருந்தது. குறிப்பாக கூடார நகரமான மினாவில் IFF தன்னார்வத் தொண்டர்களின் சேவை தனித்துவமிக்கதாக இருந்தது.

ஏற்கனவே மக்காவிலிருந்து மினாவிற்கு வந்து சேர்ந்த ஹாஜிகளுக்கு அவர்களின் கூடாரங்களுக்குச் சென்று சேர உதவி புரியும் வகையில் துல்ஹஜ் ஏழாம் நாள் அன்றே IFF தன்னார்வத் தொண்டர்கள் தங்கள் சேவைகளைத் தொடங்கினர். பின்பு துல்ஹஜ் எட்டாம் நாள் துவங்கி ஹாஜிகள் அரஃபாவிற்குச் சென்று சேர தேவையான அனைத்து உதவிகளையும் செய்தனர். இது ஒரு புறம் இருக்க, IFF தன்னார்வத் தொண்டர்கள் அனைத்து இரயில்வே நிலையங்களிலும் ஹாஜிகள் அவரவர்களுக்கு நியமிக்கப்பட்ட இரயில் நிலையங்களுக்குச் செல்வதற்கும் உதவிகள் புரிந்தனர். குறிப்பாக வயோதிகர்களுக்கும், பலவீனமானவர்களுக்கும், நோயாளிகளுக்கும் அனைத்து விதமான உதவிகளையும் IFF தன்னார்வத் தொண்டர்கள் செய்தனர்.

மேலும் முஸ்தலிபாவிலிருந்து மினாவிற்குத் திரும்பும் சமயத்தில் பல ஹாஜிகளுக்கு சக்கர நாற்காலிகளின் மூலமும் தங்களின் உதவிகளை வழங்கினர். “இந்தச் சேவைகள் ஏனோதானோவென்று வழங்கப்படுவது இல்லை. போதுமான பயிற்சியுடனும், நன்கு தயார் செய்யப்பட்ட ஒருங்கிணைப்புடனும் கூடிய திட்டம் இருந்தால் மட்டுமே மேற்கூறப்பட்ட அனைத்து சேவைகளும் சாத்தியப்படும்” எனக் கூறினார் ஹஜ் சேவை ஒருங்கிணப்பாளர் இக்பால். இவரது சீரான ஒருங்கிணைப்பிலும், IFFன் தலைவர் அஷ்ரஃப் மோராயூர் அவர்களின் வழிகாட்டுதலிலும் இந்தச் சேவைகள் சிறப்பாகச் செய்யப்படுகின்றன.

மினாவில் பல வருடங்கள் ஹாஜிகளுக்குச் சேவை செய்த அனுபத்தின் அடிப்படையில் IFF முழுமையான வரைபடம் ஒன்றை மிக எளிமையாக, அனைவருக்கும் புரியும் வகையில் தயாரித்து, ஹாஜிகளுக்கு வழங்கியது. கூடாரத்தை எளிதில் கண்டுபிடிக்கவும், வழி தவறிய ஹாஜிகள் தங்கள் கூடாரங்களுக்கு மிக எளிதாகத் திரும்பி வரவும் எளிதான தோற்றம் கொண்ட இந்த வரைபடம் மிகவும் பயனுள்ளதாகவும், உதவிகரமாகவும் இருந்ததாக ஹாஜிகள் நெகிழ்ச்சியுடன் கூறினார்கள்.


Popularfronttn.org

Related

இலங்கையின் தேசிய ஐக்கிய முன்னணி பொதுச்செயலாளர் அஸத் ஸாலி கைது : PFI கண்டனம்

கொழும்பு நகரின் முன்னாள் துணை மேயரும் தேசிய ஐக்கிய முன்னணியின் பொதுச்செயலாளருமான அஸத் ஸாலி அவர்கள் கைது செய்யப்பட்டதை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கண்டிக்கிறது. தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் வ...

குமரியில் பா.ஜ.கவினர் வெறியாட்டம்! அரசு பேருந்துகள் சேதம்!

குமரி மாவட்டத்தில் பா.ஜ.க மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநில செயற்குழு உறுப்பினருமான எம்.ஆர்.காந்தி அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பா.ஜ.கவின் மாவட்டம் முழுவதும் அராஜகங்களில்...

கர்நாடகா தேர்தலில் வெற்றி-தோல்வியை தீர்மானிக்கும் முஸ்லிம் வாக்குகள்

சாதி மற்றும் மதத்தின் பெயரால் பிரிவினைவாதம் வலுவான கர்நாடகாவில் வருகிற மே மாதம் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் முஸ்லிம் வாக்குகள் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக மாறும் என்று கணிக்க...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Hot NewsRecentArchive

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item