SDPI, - PFI, பதிவு செய்யப்பட்ட அமைப்புகள்: நிர்வாகிகள் விளக்கம்

சென்னை: "எஸ்.டி.பி.ஐ., - பி.எப்.ஐ., அமைப்புகள், தடை செய்யப்பட்ட இயக்கங்கள் அல்ல' என, அந்த அமைப்புகள் மறுத்துள்ளன. கேரளாவில், கண்ணூர் அருகே மணப்புரம் என்ற இடத்தில் போலீசார் சோதனை செய்ததில், ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இது குறித்து நேற்று வெளியான செய்தியில், கண்ணூர் போலீஸ் டி.எஸ்.பி., டாம் கூறியதாக வெளியான செய்திக்கு, "பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' (பி.எப்.ஐ.,) மற்றும் இந்திய சமூக ஜனநாயக கட்சி (எஸ்.டி.பி.ஐ.,) ஆகிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

எஸ்.டி.பி.ஐ., தமிழக தலைவர் தெஹ்லான் பாகவி கூறியிருப்பதாவது: "சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா (எஸ்.டி.பி.ஐ.,) என்பது, பதிவு செய்யப்பட்டு,நாடு முழுவதும் செயல்பட்டு வரும் தேசிய அரசியல் கட்சியாகும். எங்கள் அமைப்பு, 15க்கும் மேற்பட்ட மாநிலங்களில், மாநில கட்டமைப்புடன் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களுடனும் இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. மக்கள் பிரச்னைகளுக்காக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் எஸ்.டி.பி.ஐ., அரசியல் கட்சியை, தடை செய்யப்பட்ட இயக்கம் என்று குறிப்பிட்டு இருப்பது வருத்தத்துக்குரியது. இவ்வாறு தெஹ்லான் பாகவி கூறியுள்ளார். எஸ்.டி.பி.ஐ., பொதுச்செயலர் முபாரக்கும் இதே கருத்தை தெரிவித்துள்ளார்.

"பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' அமைப்பின் தமிழக தலைவர் முகமது அலி ஜின்னா கூறியிருப்பதாவது: "தடை செய்யப்பட்ட இயக்கமான பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா...' என குறிப்பிட்டுள்ளது, முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. நாங்கள் இதை வன்மையாக கண்டிக்கிறோம். "பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' தடை செய்யப்பட்ட இயக்கம் அல்ல; முறைப்படி பதிவு செய்யப்பட்டு, ஜனநாயக நடைமுறைகளுக்கும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கும் உட்பட்டு ஜாதி, மத பேதமின்றி அனைத்து மக்களின் நலனுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் தேசிய அளவில் செயல்பட்டு வரும் சமூக நல இயக்கம். இவ்வாறு முகமது அலி ஜின்னா கூறியுள்ளார்.

Koothanallur Muslims

Related

SDPI 7206792335253763351

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item