அப்துல் கலாமுக்கு RSS ஆதரவாம்!

இந்திய குடியரசு தலைவர் தேர்தலில் ஹிந்துத்துவா தீவிரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ் அப்துல் கலாமை ஆதரிக்கிறதாம். ஹரித்துவாரில் செய்தியாளர்களிடம் பேசிய R.S.S சர்சங்க் சாலக் (தலைவர்) மோகன் பாகவத் இதனை தெரிவித்துள்ளார்.

இதுக்குறித்து அவர் கூறியது: ‘குடியரசுத் தலைவராக அப்துல் கலாமை தேர்ந்தெடுப்பதுதான் சிறந்தது. அவர் இனிமையான மனிதர் என்று பொதுமக்கள் நினைக்கின்றனர். தேர்தலில் போட்டியிடப் போவதாகத் தெரிவித்துவரும் மற்றவர்கள் அனைவருக்கும் அரசியல் பின்னணி உள்ளது. ஆனால், அப்துல் கலாம் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்.

நான் எனது கருத்தைத் தெரிவித்துள்ளேன். மக்கள் பிரதிநிதிகள்தான் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்க முடியும்’ என்றார் மோகன் பகவத்.

பிரணாப் முகர்ஜியை எதிர்த்து வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜக கூட்டணிக் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து முடிவு அறிவிப்பதை பாஜக கூட்டணி தள்ளிவைத்துள்ளது. இந்நிலையில், R.S.S தரப்பிலிருந்து அப்துல் கலாமுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடவில்லை என்று முன்னாள் குடியரசு தலைவரும், விஞ்ஞானியுமான A.P.J.அப்துல் கலாம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போதைய அரசியல் சூழ்நிலைகளின் அடிப்படையில் குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிட தமது மனசாட்சி இடம் கொடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் தாம் போட்டியிட விருப்பம் தெரிவித்த அனைவருக்கும் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கலாம் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அப்துல் கலாம் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி இன்று கலாமிடம் 3 முறை தொலைபேசியில் பேசியிருந்தார். மமதா பானர்ஜியும் தொலைபேசியில் தொடர்பு கொண்டிருந்தார். மேலும் பாஜகவின் குல்கர்னி நேரில் சென்று கலாமை சந்தித்துப் பேசினார். இந்நிலையில் குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை என அப்துல் கலாம் அறிவித்துள்ளார்.

Related

இந்தியாவுக்கு தாலிபான் பாராட்டு

ஆப்கானிஸ்தானில் கூடுதல் தலையீடு தேவை என்ற அமெரிக்காவின் நிர்பந்தத்திற்கு அடிபணியாத இந்தியாவுக்கு தாலிபான் பாராட்டு தெரிவித்துள்ளது. தாலிபானின் ஆங்கில இணையதளத்தில் இத்தகவல் வெளியாகியுள்ளது.தாலிபான் ...

தீவிரவாத வேட்டை: சிதம்பரம் வீட்டிற்கு முன் தர்ணா மறுப்பு

தீவிரவாதத்தின் பெயரால் முஸ்லிம் இளைஞர்களை பொய் வழக்கில் சிக்கவைக்கும் போலீஸ் நடவடிக்கையை கண்டித்து மனித உரிமை ஆர்வலர்கள் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் வீட்டிற்கு முன்னால் நடத்தவிருந்த போர...

தமிழகத்தில் பயங்கர வெடிப்பொருட்கள் பறிமுதல்! மௌனமான ஊடகங்கள்

தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் பெருமளவிலான வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்ட பிறகும் அதனை ஒரு சாதாரண செய்தியாகவே ஊடகங்கள் வெளியிட்டன.அண்மையில் பா.ஜ.க மதுரை மாநாட்டிற்கு முன்பாக சைக்கிளில் பொருத்தப்பட...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Hot NewsRecentArchive

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item