கஷ்மீரில் தொடரும் போராட்டம்

கஷ்மீரிலுள்ள ஷோஃபியானில் இரண்டு முஸ்லிம் இளம் பெண்களை சி.ஆர்.பி.எஃப் ஐச்சார்ந்த வெறியர்கள் பாலியல் பலாத்காரம் செய்துகொன்ற நிகழ்வை கண்டித்து நடக்கும் போராட்டங்கள் மூலம் கஷ்மீர் கொந்தளித்துக்கொண்டிருக்கிறது.
ஆயிரக்கணக்கான பெண்கள் குறிப்பாக மாணவிகள் பெருந்திரளாக வீதிகளில் கூடி நீதிக்காகவும் கஷ்மீரிலிருந்து இந்திய ராணுவத்தின் ஆக்கிரமிப்பை அகற்றுமாறு கோரி போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
அமைதியான முறையில் நடைபெறும் இந்த போராட்டங்களை இந்திய ராணுவமும் காவல்துறையும் இணைந்து அநீதமான முறையில் அடக்கிவருகின்றனர். மீடியாக்கள் இச்செய்திகளை மறைத்துவருகின்றன. உள்ளூர் கேபிள் சேனல்களில் இச்செய்திகளை ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுதான் ஜனநாயகம்! இதுதான் நீதி! அவமானம்! எங்கே போய்விட்டது காந்தியின் அகிம்சை?

கஷ்மீர் இந்தியாவிலுள்ள மாநிலம் என்று கூறுபவர்கள் வேறு மாநிலத்தவர்கள் கஷ்மீரைப்பற்றி பேசினாலேயே அதை தேசதுரோகம் என்று கருதும் வெட்கக்கேடான போக்கு. தொடர்ந்து பல ஆண்டுகளாக தொடரும் அநீதம்! உயிரையும் மானத்தையும் உறவுகளையும் சொத்துகளையும் இழந்தபின்னரும் அநீத்த்திற்கு எதிராக வீதியில் இறங்கி போராடும் கஷ்மீர் மக்கள் பாராட்டுக்குரியவர்கள்.

Related

MUSLIMS 4085851282873513081

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item