சமூகத்தை சக்திபடுத்த கைகோர்ப்போம்! பாப்புலர் ஃப்ரண்ட்

மறுபுரம் ஃபாசிஸ சங்கப்பரிவாரங்களால் முஸ்லிம் சமூகம் தொடர்ந்து தாக்குதல்களுக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களில் சமீபத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களே இதற்கு சாட்சியாக இருக்கின்றது.
இந்நிலையில் முஸ்லிம் சமூகம் இது தொடர்பான் விழிப்புண்ர்வை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையிலும், சமூகத்தை வலிமைப்படுத்த நான் ஒன்றினைந்து கைகோர்த்து செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தமிழகம் முழுவதும் பிரச்சாரத்தை துவக்கியுள்ளது.
இது தொடர்பாக கோவையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாப்புலர் ஃப்ரண்டின் மாநில தலைவர் ஏ.எஸ். இஸ்மாயில், மாநில பேச்சாளர் இமாம் அன்சாரி, மாநில செயற்குழு உறுப்பினர் முஹைதீன், எஸ்.டி.பி.ஐயின் மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது, கோவை மாவட்ட தலைவர் ராஜா முஹம்மது உட்பட ஏராளமான தலைவர்கள் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர். பெரும் திரளான மக்கள் இதில் கலந்து கொண்டனர்.