திப்புசுல்தான்,ஹைதர் அலிக்கு மணிமண்டபம்! முதல்வர் அறிவிப்புக்கு PFI வரவேற்பு

இந்திய சுதந்திரப்போராட்டத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து தீரமுடன் போரிட்டு தனது இன்னுயிரை நீத்த மாவீரன் திப்புசுல்தான், அவரது தந்தை மாவீரர் ஹைதர் அலி ஆகியோருக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரே வளாகத்தில் மணி மண்படம் கட்டப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிக்கை வெளியிட்டார்.அவரது அறிவிப்பை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வரவேற்றுள்ளது.

இதுத்தொடர்பாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழக மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயீல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா  தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன்கீழ் வாசித்த அறிக்கையில் ஆங்கிலேயர்களின் ஏகாதிபத்திய ஆட்சிக்கும், அடிமைத்தனத்திற்கும் எதிராக கிளர்ந்தெழுந்து தன்னுயிரையும் துச்சமென மதித்து போராடி வீரமரணம் அடைந்த ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஆகியோர் நினைவாக திண்டுக்கல் மாவட்டத்தில், அரசின் சார்பில் ஒரே வளாகத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்பதை அறிவிப்பு செய்தார். இந்த அறிவிப்பை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வரவேற்கிறது.  இதன் மூலம் சுதந்திரப் போரட்டத்தில் முஸ்லிம்களின் பங்களிப்பை எளிதாக மக்களுக்கு கொண்டு சேர்க்க முடியும்.  மேலும் இந்திய  முஸ்லிம்களின்  வரலாறு சம்பந்தமான நூலகம் ஒன்றையும் இதில் அமைக்க வேண்டும் எனவும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேட்டு கொள்கிறது.

Related

முக்கியமானவை 5550268142830383912

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item