தமுமுக தலைவருக்கு உற்சாக வரவேற்பு

தமுமுக-மமக தலைவர் மவ்லவி ஜே.எஸ்.ரிபாயீ அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஜாமீனில் இன்று காலை விடுதலை செய்யப்பட்டார்கள். அவரை புழல் சிறைக்கு வெளியே வடசென்னை, தென்சென்னை, காஞ்சி(வ), காஞ்சி(தெ), திருவள்ளூர்(மே), திருவள்ளூர்(கி), வேலூர்(மே), வேலூர்(கி) மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள், நகர, கிளை நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தார்கள். தொடர்ந்து தமுமுக-மமக தொண்டர்கள் இருசக்கர வாகனங்கள் அணிவகுக்க தலைமையகத்திற்கு வருகை தந்தார்கள்.

தலைமையகத்தில் அவரை மூத்த தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், தமுமுக பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது, பொருளாளர் ஒ.யு.ரஹ்மத்துல்லாஹ், மமக இணை பொதுச் செயலாளர் எஸ்.எஸ். ஹாரூண் ரஷீத் உள்ளிட்டோர் அவரை வரவேற்றார்கள். தொடர்ந்து குழுமியிருந்த தமுமுக-மமக தொண்டர்களிடையே மூத்த தலைவர் உரை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து தமுமுக தலைவர் ஜே.எஸ். ரிபாயீ உரையாற்றினார். அவர் தனது உரையில், தனது விடுதலைக்காக இறைவனிடம் பிரார்த்தித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்தார். வெளிநாட்டு வாழ் சகோதரர்களுக்கும் நன்றி தெரிவித்தார். மேலும் தம்மைப் போல் சிறைகளில் வாடிவரும் சிறைவாசிகள் அனைவரின் விடுதலைக்காகவும் பிரார்த்தனை செய்யுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.






 
 
 


 

 

Related

இயக்கங்கள் 8755386032272308278

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item