நரேந்திர மோடியின் ஆயுத பூஜை

Modi1

narendramodiweapon_afp
ஜம்மு-காஷ்மீரில், தீவீரவாதிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களோடு நமது ஜனாதிபதி பிரதீபா பாட்டில் அவர்கள் காட்சியளிக்கும் புகைப்படம் ஒன்று கொஞ்ச காலத்துக்கு முன்பு பத்திரிகையில் வந்தது. ஜம்மு-ஜாஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா அதற்கு கண்டனங்களையும், வருத்தங்களையும் தெரிவித்தார். “நான் நம் ஜனாதிபதி அவர்கள் குழந்தைகளோடு உரையாடுவது போன்ற புகைப்படங்களை பார்க்கவே விரும்புகிறேன்” என்று அவர் சொன்னார்.
இங்கோ, ஒரு மாநில முதல்வர் பயங்கரமான ஆயுதங்களை வைத்து பூஜையே நடத்தி போஸ் கொடுத்துக் கொண்டு இருக்கிறார். விஜயதசமியன்று குஜராத் முதல்வர் மோடி, தனது அதிரடிப்படையினரின் ஏ.கே 47 உள்ளிட்ட ஆயுதங்களை வைத்து வழிபாடு நடத்தியிருக்கிறார்.
“ஒரு போர் வீரன் இப்படிப்பட்ட வழிபாடு நடத்தலாம், ஆனால் மோடி ஒரு சிவிலியன். எப்படி நடத்தலாம்” என்று சாத்திர ரீதியான, அரசியல் அமைப்பு ரீதியான விவாதங்கள் நடக்கின்றன.
“ஒரு காவலாளி எந்நேரமும் தன் ஆயுதத்தை வைத்திருக்க வேண்டும். எப்படி இன்னொருவரிடம் கொடுக்க முடியும்.” ஒழுக்க விதிகள் மீறப்பட்டு இருக்கின்றன என்பதும், இந்திய ஊடகங்களில் வெளிவந்து கொண்டு இருக்கின்ற முக்கியமான சர்ச்சைகளும் ஒன்று.
மோடி என்னும் ‘இந்து’ செய்தால் இங்கு அது வெறும் சடங்கு மட்டுமே!
இங்கே இந்துத்துவாவின், பாசிசத்தின் முகம் ஒன்று கோரப்பல்லைக் காட்டியபடி அப்பட்டமாய் வெளிப்பட்டுக் கொண்டு இருக்கிறதே, அது இந்த மேதாவிகளின் கண்களுக்குத் தெரியவில்லையா? “தன் மக்களை காப்பதற்கு பயன்படும் ஆயுதங்களை வழிபடுவதில் என்ன தவறு” என்ற மோடியின் வசனங்களுக்கு அர்த்தம் புரியவில்லையா?
தீவீரவாதம், பயங்கரவாதம் எல்லாவற்றுக்கும் சில முகங்களை வைத்தே காட்சிப்படுத்துபவர்கள் மோடியையும் சேர்த்துப் பார்க்க வேண்டும். தீவீரவாதத்தின் ஊற்றுக்கண் எங்கு இருக்கிறது என்பது அப்போது புரியும்.
வாழ்நாளெல்லாம் அஹிம்சையை போதித்த காந்தி பிறந்த மண்ணுக்கு இன்னொரு அவமானம்.
அபாயச்சங்குகள் அலறுகின்றன.

Related

Modi 7871792296032570415

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item