போலீஸ் தடையை மீறி அணிவகுப்பு ஊர்வலம்: ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் 500 பேர் கைது


இந்நிலையில், நேற்று மாலை,கோவை - காந்திபுரம் தமிழ்நாடு ஓட்டல் முன், இந்து முன்னணி நிறுவன தலைவர் ராம.கோபாலன், மாநில செயலர் காடேஸ்வரா சுப்பிரமணியம், ஆர்.எஸ்.எஸ்., மாநில தலைவர் மாரிமுத்து, கோவை மாநகர தலைவர் ராமநாதன், பி.எம்.எஸ். அகில பாரத செயலர் ராஜகோபால் உள்ளிட்ட, 200க்கு மேற்பட்ட தொண்டர்கள் பிரார்த்தனைப் பாடலைப் பாடினர். அதன் பின், அணிவகுப்பு ஊர்வலம் நடத்த முயன்றனர். ஊர்வலத்தை தடுத்து நிறுத்திய போலீசார், அனைவரையும் கைது செய்தனர். அதே நேரத்தில்,மற்ற இடங்களில் ஊர்வலம் நடத்த முயன்றவர்களும் கைது செய்யப்பட்டனர். ஒட்டுமொத்தமாக, ஐநூறு பேர் கைது செய்யப்பட்டனர்.