கூத்தாநல்லூர்-ல் விநாயகர் சிலையை காவல்துறையே கரைத்த அவலம்

வட இந்தியாவில் இருந்து மத கலவரம் செய்யும் நோக்கத்துடன் இறக்குமதி செய்யப்பட்டது தான் இந்த விநாயகர் சதுர்த்தி என்னும் பிள்ளையார் பிறந்த நாள் (பிள்ளையார் உருவாக்கபட்ட நாள்). இந்த விநாயகர் சதுர்த்தி பல ஹிந்து மக்களால் அமைதியாக வீட்டிலே கொண்டாடபடுகிறது. சில ஹிந்து மத வெறியர்கள் விநாயகர் சதுர்த்தியை ஹிந்து முஸ்லிம் இடையே கலவரம் ஏற்படுத்துவதற்காகவே கொண்டாடுகின்றனர். கடந்த 20 ஆண்டுகளில் தமிழகத்தில் இந்த விநாயகர் ஊர்வலத்தால் நடந்த கலவரங்கள் ஏராளம் ஏராளம். அதில் அதிகமாக பாதிக்கப்பட்டது முஸ்லிம்களின் உயிர்களும் உடமைகளுமே....

கலவரம் செய்யும் நோக்கத்துடன் வைக்க பட்ட விநாயகர்


திருவாரூர் மாவட்டத்திலே இஸ்லாமிய மக்கள் அதிகமாக வாழும் பகுதியில் கூத்தாநல்லூர்-ம் ஒன்று. முத்துபேட்டையை கலவர பூமியாக்கிய ஹிந்துத்துவ காவி கும்பலுக்கு அடுத்த இலக்காக இருப்பது கூத்தாநல்லூர் என்று அவ்வூர் மக்களால் கண்டிப்பாக யூகிக்க முடியும். அந்த அளவுக்கு ஹிந்து முன்னணி அமைப்பினரால் உருவாக்கபட்ட "ஹிந்து சமுதாய பாதுகாப்பு பேரவை" அமைப்பினர் செயல்படுகின்றனர்.

கடந்த வருடம் கூத்தாநல்லூர் உள்ளே முஸ்லிம்கள் வாழும் பகுதியில் அத்து மீறி கலவரம் செய்யும் நோக்கத்துடன் ஊர்வலம் கொண்டு வரப்பட்டது, அதனை அறிந்த கூத்தாநல்லூர் இளைஞர்கள் ஒன்றுகூடி ஊர்வலம் கொண்டுவந்த ஹிந்து சமுதாய பாதுகாப்பு பேரவை மற்றும் காவல் துறையினரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அதில் முஸ்லிம் இளைஞர்கள் "ஹிந்து ஒழிக! ஹிந்து சமுதாயம் ஒழிக! ஹிந்துஸ்தான் ஒழிக! பாகிஸ்தான் வாழ்க! " என்று கோசம் எழுப்பியதாக பொய் பிரசாரம் செய்து ஹிந்து சமுதாய பாதுகாப்பு பேரவை-யை சேர்ந்தவர்கள் ஒரு ஆர்பாட்டத்தை நடத்தினார்கள் என்பது குறிப்பிடதக்கது.

கடந்த வருட சம்பவத்தால் ஆத்திரம் அடைந்த ஹிந்து சமுதாய பாதுகாப்பு பேரவை-யினர் இந்த வருடமும் அதே வழியாக ஊர்வலம் எடுத்து செல்வோம் என்று முடிவு செய்து, புதிய வழி கேட்டு கூத்தாநல்லூர் ஜமாத்தினரை Peace Meeting அழைத்துள்ளனர். RDO மற்றும் தாசில்தார் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் ஹிந்து சமுதாய பாதுகாப்பு பேரவை சேந்தவர்கள் மிக கடுமையாக வாதிட்டு,  புதிய வழி தந்தால் மட்டும் தான் இந்த வருடம் விநாயகர் ஊர்வலம் எடுப்போம் என்றும், புதிய பாதைக்கு அனுமதி  மறுத்தால் விநாயகர் ஊர்வலத்தை எந்த தடை வந்தாலும் கூத்தாநல்லூர் வழியாக தான் எடுத்து செல்வோம் என்று கூறியுள்ளனர். நாங்கள் எதற்கும் தயார் என்றும் கூறியுள்ளனர்.

கூத்தாநல்லூர் ஜமாத்தினர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் விநாயகர் ஊர்வலம் ஊர் உள்ளே வருவதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த காரணத்தினால் திருவாரூர் கலக்டர் ஆணைப்படி 15-ஆம் தேதிக்குள் விநாயகர் சிலையை பழைய வழியில் ஊர்வலமாக எடுத்து சென்று கரைக்குமாறு ஆணை பிறப்பிக்கபட்டது பின்பு கூத்தாநல்லூர் காவல் துறையினரால் எச்சரிக்கையும் செய்யப்பட்டது. அதையும் பெரிது படுத்தாத ஹிந்து சமுதாய பாதுகாப்பு பேரவை-யினர் 17-ஆம் தேதி வரை  கலவரம் செய்யும் நோக்கத்துடனே இருந்தனர்.

உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருப்பதால் திருவாரூர் மாவட்ட காவல் துறை ஆய்வாளர் உத்திரவின் பேரில் 18-ஆம் தேதி காலையில்  ஹிந்து சமுதாய பாதுகாப்பு பேரவை-யினர் கைது செய்யப்பட்டு எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க கூடுதல் போலீஸ் பாதுக்காப்புடன் விநாயகர் சிலையை போலீசார் லெட்சுமாங்குடி ஆற்றில் கரைத்தனர். போலிசாரின் இந்த முயற்சியால் ஹிந்துத்துவ வாதிகளின் கலவர திட்டம் முறியடிக்க பட்டது.

வழக்கம் போலே 19-ஆம் தேதி கூத்தாநல்லூர் லெட்சுமாங்குடி பாலம் அருகே  பா.ஜ.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 100-க்கும் மேற்ப்பட்ட  நபர்கள் கலந்துகொண்டனர்.

அமைதி பூங்காவாக திகழும் கூத்தாநல்லூர்-ல் மத கலவரங்கள் செய்ய துடிக்கும் ஹிந்து சமுதாய பாதுகாப்பு பேரவை மற்றும் கலவரம் செய்யும் நோக்கத்துடன் எடுக்கப்படும் விநாயகர் ஊர்வலத்தையும் காவல் துறையும் தமிழக அரசும் தடை செய்ய நடவடிக்கை எடுக்குமா என்பதே கூத்தாநல்லூர் வாழ் மக்களின் கேள்வியாக உள்ளது.

கடந்த ஆண்டு செய்திகள்:


பொய் பிரசாரம் செய்து கலவரத்தை தூண்டும் ஹிந்து அமைப்புகள்

Related

RSS 4840252381824639764

Post a Comment

  1. KNR muslims must be cautious in the coming days that the newly formed "anti social elements aka BJP" will do everything to disrupt normal life in KNR.

    USA

    ReplyDelete
  2. Brothers should be very careful in coming days, keeping in mind that they are among us and with us (May be as a thickest friend, as a customer, as a good merchant for many years).

    If we follow our religion strictly, no one can do anything. Be fare to everyone but not beyond limits.

    Allah make us weak in front of our enemies if our eemaan is weak. Awareness to be created between our sisters. May Allah save us.

    -Nr

    ReplyDelete
  3. prepare for battle all muslim brothers

    ReplyDelete

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item